I starting writing this post when I had to sit at home idly waiting for the Joining Order from TESCO. Stopped it in draft level coz, I had been writing it over many days, lost interest in continuing and thought its too lengthy for anyone to read.
Just now unearthed it from 'drafts' and here is the same unfinished write-up for you all.
Please do try to read and comment.
உங்கள் வீட்டு முற்றத்தில் நீங்கள் நிற்க அடுத்த வீட்டுக்காரன் கண்டனம் தெரிவித்தால் எப்படி உணர்வீர்கள் ??!! அப்படித்தான் பார்க்கிறேன் பிரதமர் மன்மோகன் சிங் ன் அருணாச்சலப் பிரதேசப் பயணம் பற்றிய சீனா வின் கருத்தை!!
இந்தியா விடுதலை பெற்ற காலம் முதலே சீனா உடனான உறவு கோவைக்காய் கசப்பு தான்! ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் சீனா ஆகிய இரு நாடுகளுமே ஊடுருவிய வண்ணமே உள்ளன. காஷ்மீரின் வடமேற்கு பகுதிகள் பல பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும், வடகிழக்குப் பகுதிகள் பல சீனாவின் கட்டுப்பாட்டிலும் தான் உள்ளன. மீதமுள்ள பகுதிகளைக் காப்பாற்றுவதே பெரும் பாடக உள்ளது.
பாகிஸ்தானை பொறுத்த வரை, அந்த நாடு ஒரு அக்மார்க் ISI முத்திரை குத்தப்பட்ட தீவிரவாத நாடாகிவிட்டது. உலகத்திலேயே அதிக மக்கள்தொகை, மிகவும் பழமைவாய்ந்த நாகரிகம், எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகெங்கும் சீன பொருள்களுக்கான மதிப்பு என்று எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் சீனா, இந்தியாவிடம் எல்லை மீறலில் ஈடுபடுவதின் காரணம் தான் புரியவில்லை!!!
சீனா என்று நாம் ஒரே வார்த்தையில் அழைத்தாலும் அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு!!! ஒன்று, People's Republic of China (PRC) - நாம் 'சீனா' வாக அறிந்த சீனா. மற்றொன்று, Republic of China (ROC) - நாம் தாய்வான் என்று அழைக்கும் சீனா!! 1927 முதல் 1949 வரை நடந்த 'சிவில் வார்' ஐ தொடர்ந்து இந்த பிளவு ஏற்பட்டது.
சரி, சீனா-இந்திய இடையேவான பிரச்சனைகளை கவனிப்போம். சீனா இந்தியா இடையே சிறிதளவில் எல்லை பிரச்சனைகள் இருந்து வந்த போதிலும், அது பெரும் போராக விஸ்வரூபம் எடுக்கக் காரணம் ????!!! காரணம், 'திபெத்' என்னும் மந்திரச்சொல்.
திபெத் - உலகின் கூரை!!! இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட பிரதேசம். உலகின் மிக உயரமான இடம். ஏழாம் நூற்றாண்டில் உருவான ஒரு அமைதி பூங்கா. திபெத் பெரும்பாலும் 'தலாய் லாமா' என்று அழைக்கப்படும் புத்த மத துரவியர்களால் ஆளப்பட்ட தேசம். 1913 ம் ஆண்டு வரை திபெத், சீனாவின் ஆளுமைக்கு கீழ்படிந்த ஒரு சிற்றரசு போலவே இருந்தது. 1913 ம் ஆண்டு திபெத்தின் 13 வது தலாய் லாமா, சீன ஆளுமையை புறக்கணித்து திபெத்தை தன்னாட்சி பெற்ற தேசமாக அறிவித்தார்!! ஆனால், உலகில் எந்த நாடும் இதை ஏற்கவில்லை. 1950 ம் வருடம் சீனா தன் இராணுவ பலத்தால் திபெத்தை கைப்பற்றியது. இன்று வரை அந்த அழகுக் கொடி அசுரப்பிடியில் தான் சிக்கியுள்ளது.
1951 இல் திபெத்-சீனா இடையேஆன 17 அம்ச ஒப்பந்தம் செயலாக்கப்பட்டது. பொறுமையாக காத்திருந்து, 1956 ம் ஆண்டு, திபெத்தின் காம் மற்றும் ஆம்தோ பகுதிகளில் கிளர்ச்சி துவங்கியது. திபெத்தின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பமானது. தலைநகர் லாசாவிலிருந்து ஒரு படை சீனாவின் வர்ப்புருத்தலின் பேரில், இந்த கிளைச்சியாளர்களை ஒடுக்கப் புறப்பட்டது. சீனா சற்றும் எதிர்பாராத வண்ணம், இந்தப் படை கிளர்ச்சியாலைகளை ஒடுக்காமல், அவர்களுடன் கை கோர்த்தது. வியப்பூட்டும் வகையில், கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையின் பேரில் அமெரிக்காவின் CIA உதவி கிட்டியது.
1959 - லாசா வின் அருகில் உள்ள ஒரு சீன இராணுவ முகாமுக்கு தலாய் லாமா வரவேற்க்கப்பட்டார்!!! இந்த, சந்திப்பை மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தார் லாமா. இந்த சந்திப்பிற்கு தலாய் லாமா தனது பாதுகாவலர்கள் இல்லாமல், வழக்கமான ஊர்வலம் இல்லாமல் வரவேண்டும் என்று கூறியது சீன இராணுவம். இது தலாய் லாமாவை கைது செய்வதற்கான ஏற்பாடு என்று திபெத்தியர்கள் கருதினார்கள். மார்ச் பத்தாம் தேதி, 3,00,000 திபெத்தியர்கள் பொடாலா அரண்மனை முன் கூடினார்கள். தலாய் லாமா வை சந்திப்பிருக்கு செல்லக்கூடாது என்று தடுத்தனர். மார்ச் 12 ம் தேதி கிளர்ச்சியாளர்கள் திபெத் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர். திபெத்தை போர் மேகம் சூழ்ந்தது. தலாய் லாமா அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. போரில் திபெத் ஒடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறி "இந்தியா" வந்தடைந்தார்!!
இந்தியா வந்தடைந்த தலாய் லாமா 'தர்மசாலா' என்னும் இடத்தில் "Government of Tibet in Exile" என்ற பெயரில் திபெத்தின் அரசாங்கத்தை நிறுவினார்.!!!! இதுவே இந்தியா-சீனா இடயேவான எல்லை பிரச்சனையை தீவிரப்படுத்தும் செயலாக அமைந்தது.
சரி........நம்ம இந்தியா சைனா பத்தி தானே பேச ஆரம்பிச்சோம் ?!! இதுல ரொம்ப நேரமா திபெத் பத்தியே பேசியாச்சு. அந்த அளவுக்கு திபெத் இந்த பிரச்சனைல சமந்தபட்டு இருக்கு. (கொஞ்சம் மொழி நடைய மாத்திக்குவோம். உங்களுக்கும் படிக்க போர் அடிக்காம இருக்கும்ல.)
1914 ல இந்தியா 'பிரிட்டிஷ் இந்தியா" வா இருந்தப்போ, இந்தியா-திபெத் சேந்து எல்லைல ஒரு கோடு கிழிச்சாங்க.... அது தான் மக்மகோன் லைன் (McMahon Line) ! அந்த ஒப்பந்தப்படி இந்த கோடு தான் இந்தியா-திபெத் பார்டர். ஆனா சைனா இத ஒத்துக்கவே இல்ல. திபெத் க்கு தனி நாடு என்ற அந்தஸ்தே கிடையாது. அதனால திபெத் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்த ஏத்துக்க முடியாது - அப்டிங்கறது தான் சைனா வோட நிலை. இந்தியா-சைனா எல்லை ல பிரச்னைக்கு உரிய இடங்கள் ரெண்டு. ஒன்னு, "அக்சை சின்" (aksai chin). இந்த இடம் இப்போ சைனா கட்டுப்பாட்டுல தான் இருக்குன்னாலும் இந்திய இது ஜம்மு காஷ்மீர் இன் ஒரு பகுதின்னு வாதாடுது. ரெண்டாவது பிரச்சனையை பிரதேசம் "அருணாச்சலப் பிரதேசம்" (Arunachal Pradesh). இது இந்தியாவின் ஒரு மாநிலமாச்சேன்னு யோசிக்கறீங்களா ??! சைனாவை பொறுத்த வரைக்கும் இந்த பகுதி "தெற்கு திபெத்" (south tibet).
இந்த எல்லை பிரச்சனைகள் மட்டும் இல்லாம, திபெத்துக்கு இந்தியா தந்த ஆதரவும் தான் இந்தியா-சீனா இடையே நடந்த 1962 போருக்கு காரணம். Sino-India War I - இதை நான் விவரிக்க வேண்டுமெனில் ஒரு பதிவு பத்தாது. தனது எல்லை என்று தான் கருதிய இடம் வரை சீனா ஊடுருவிய நிகழ்ச்சி. அது தீர்மானித்த தூரம் ஊடுருவியதும், தன்னிச்சையாக சீனா வே போரைக் கைவிட்டது. உலகின் எல்லா போர்களைப் போலவே இந்த போரைத் தொடர்ந்தும் சில பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
1980 களில் பிரதமர் ஆன இந்திரா காந்தி இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகள் எடுத்தார். அதன் ஒரு பகுதியாக இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். இது தொடர்பாக ஒரு இராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அஸ்ஸாம் இல் இருந்து நமது படை சீன எல்லைக்கு சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும், என்னென்ன இடையூறுகள் நேரும் என்று அறியவிரும்பி நடத்தப்பட்ட ஒத்திகை. இந்த ஒத்திகையின் கிளைமாக்ஸ் ஆக இந்தியப் படை எல்லையில் குவிந்தது. இதைக் கண்டு திகைத்த சீனாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. இது உலகளாவிய வகையில் ஒரு 'skrimish' ஆக கருதப்படுகின்றது.
இன்றளவும், இந்திய-சீன எல்லை உலகின் மிக பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. !!!!
1 comment:
"I starting writing...."
That was a typo err. Dont blame me for tht.
Post a Comment